மணவாட்டி ஊழியம்

மணவாட்டி ஊழியம்

Wednesday, September 23, 2015

ஒரு குறைகூறுபவன் மேல் நியாத்தீர்ப்பு தாக்குதல்




சில நாட்களுக்கு முன்பு நியூஆல்பனியில், ஒரு பாவியுடன் நான் நின்று பேசிக்கொண்டு, அவனைக் கிறிஸ்துவினிடம் வழி நடத்திக் கொண்டிருந்த போது, மோட்டார் வாகனங்கள் பழுது பார்க்கும் கொட்டகையிலுள்ள முரட்டு கையுடைய, பெரிய உருவம் படைத்த ஒருவன் அவன் என் நண்பன். அவனுடைய மருமகன் பக்கத்திலுள்ள அந்த கொட்டகையின் உரிமையாளர். அங்கு பகல் உணவு நேரத்தில், நான் ஒரு சான்ட்விச்சை தின்று கொண்டு, அவனிடம் தேவனைக் குறித்து பேசிக் கொண்டிருந்தேன். பகல் உணவு வேளையில், கிறிஸ்துவுக்காக ஒரு ஆத்துமாவைக் கொள்ள ஒரு இடத்தை தேடிப்பிடித்து, அங்கு நான் செல்வது வழக்கம். அந்த பாவி, திரு.பிரன்ஹாமே, என் தாய் அப்படிப்பட்ட மார்க்கத்தை இருதயத்தை உணர்த்தும் மார்க்கத்தை கடைபிடித்திருந்தார்கள் என்றான். அவன் கன்னங்களில் கண்ணீர்வடிந்து கொண்டிருந்தது.

நான், அவர்கள் மரித்து எத்தனை ஆண்டுகளாயின? என்று கேட்டேன்.

அவன், அநேக ஆண்டுகள். அவர்கள் எனக்காக எப்பொழுதும் ஜெபம் செய்து வந்தார்கள் என்றான்.

நான், அவர்களுடைய ஜெபத்திற்கு செவி கொடுத்த தேவன் இப்பொழுது பதிலளிக்கிறார் என்றேன்.

அந்த முரட்டு மனிதன் அங்கு வந்து, ஹல்லோ என்றான். அவன் குடித்திருந்தான். அவன், பில்லி கேள். நீ இந்த கொட்டகைக்கு எப்பொழுது வேண்டுமானாலும் வரலாம். ஆனால் உன்னுடைய பழைய உருளும் பரிசுத்தர் மார்க்கத்தை இங்கே கொண்டு வராதே என்றான்.

நான் திரும்பி அவனைப் பார்த்தேன். கிறிஸ்து வரவேற்கப்படாத இடத்துக்கு நான் வரமாட்டேன் என்றேன்.

அப்பொழுது என் இருதயத்தில் ஒரு சத்தம். நீ எதை விதைக்கிறாயோ அதையே அறுப்பாய். உன் கழுத்தில் ஏந்திரக்கல்லை கட்டி சமுத்திரத்தின் ஆழத்திலே உன்னை அமிழ்த்துவது நலமாயிருக்கும் என்றது. அன்று பிற்பகல் அவனுடைய மருமகன், சரக்குகள் முழுவதுமாக ஏற்றியிருந்த இரண்டு டன் ஷெவர்லே லாரியை அவன் மேல் தெரியாமல் ஏற்றி, அவனைத் தரையில் கூழாக்கி விட்டான்.

பாருங்கள், நீங்கள் தேவனுக்கு மரியாதை செலுத்த வேண்டும். நீங்கள் அதை செய்தே தீர வேண்டும். தேவன் மரியாதையை அதிகாரத்துடன் கேட்கிறார்.

மரியாதை, அக்டோபர் 15, 1961, பத்தி எண் 91-97



No comments:

Post a Comment