மணவாட்டி ஊழியம்

மணவாட்டி ஊழியம்

Wednesday, September 23, 2015

மீன் பிடித்தலும் ஆமையும்




நானும் எனது சகோதரனும் சிறுவர்களாயிருக்கையில், ஒரு சமயம், மீன் பிடித்துக் கொண்டிருந்தோம். நான் அப்பொழுது தூண்டிலில் ஒரு வயதான பெரிய ஆமையைப் பிடித்தேன். இந்த வகை ஆமை மிகுந்த வலுவுடன் தூண்டிலை இழுக்கக் கூடியது. எனவே அது என்னை ஏமாற்றிவிடாதபடி இருக்க, உடனே நான் தூண்டில் முள்ளைக் கவ்விய அதன் தலையைக் கிள்ளி ஆற்றுக் கரையில் எறிந்துவிட்டேன். என்னுடைய தம்பி அங்கே வந்து, சற்று முன்னர் நீ எதைப் பிடித்தாய்? என்று கேட்டான்.

நான், ஒரு ஆமை என்று கூறினேன்.

அதை என்ன செய்தாய்? என்று கேட்டான்.

அதை நான் அங்கே போட்டு விட்டேன். அதோ அதன் தலை அங்கே கிடக்கிறது என்று கூறினேன்.

அவன் அதனிடமாகப் போய், அது செத்துவிட்டதா? என்று கேட்டான்.

நிச்சயமாக! அதன் தலையை அதன் சரீரத்திலிருந்து வெட்டி எறிந்து விட்டேன், அது மரித்துதான் இருக்க வேண்டும் என்று நான் பதிலளித்தேன்.

எனவே, அப்பொழுது அவன் ஒரு குச்சியை எடுத்து, அந்த ஆமைத்தலையை மீண்டும் நதியில் போட்டுவிட எத்தனித்து, குச்சியை அதனருகில் கொண்டு சென்றான். அவ்வாறு அவன் செய்த பொழுது, அந்த ஆமை அக்குச்சியை கவ்வியது. இவ்வகை ஆமையானது, அதன் சரீரத்தினின்று தலையைப் பிய்த்து எறிந்து விட்டாலும், ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரத்திற்கு அது உயிரோடிருக்கும். என் தம்பி, செத்துப் போனதாக எண்ணப்பட்ட ஆமைத்தலையானது அக்குச்சியைக் கவ்வியதைக் கண்டதும், துள்ளிக்குதித்து, ஹேய், இதென்ன அது செத்துவிட்டது என்று சொன்னாயே என்று கத்தினான்.
அது மரித்தே விட்டது என்று நான் கூறினேன்.

நல்லது, ஆமைக்கு தான் மரித்து விட்டது தெரியவில்லையா என்று பதிலளித்தான்.

அவ்விதமாகத்தான் அநேகர், தாங்கள் மரித்தவர்களாயிருந்தாலும் அதை அறிய மாட்டாதவர்களாயிருக்கிறார்கள்.


எபேசு சபையின் காலம், டிசம்பர் 5, 1960, பத்தி எண் 162-167

No comments:

Post a Comment